search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவருடன் தகராறு"

    ஊத்துக்கோட்டை அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளைமேனி கிராமத்தை சேர்ந்தவர் கிஷ்டாரெட்டி. இவரது மகள் ருத்ராதேவி (வயது 23). இவருக்கும் சென்னை நந்தனத்தை சேர்ந்த அய்யப்பன் (34) என்பவருக்கும் கடந்த அக்டோபர் 21-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

    திருமணத்துக்கு பிறகு கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. தலை பொங்கல் கொண்டாட ருத்ராதேவி கணவனுடன் சூளைமேனியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார். அங்கும் கணவன் மனைவி இடையே தகராறு நடந்தது.

    அய்யப்பன் மனைவியை திட்டி விட்டு சென்னைக்கு சென்று விட்டார். இதனால் மனம்உடைந்த ருத்ராதேவி மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சூளகிரி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மனைவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஏரியபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சமையல் காரராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி மாணிக்கம் (வயது26) இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. 

    கணவன் - மனைவிக் கிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் - மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மாணிக்கம் இன்று அதிகாலை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஏரியூர் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் அம்மா வீட்டிற்கு சென்ற 32 வயது பெண்ணை 20 வயது வாலிபர் கடத்தி சென்றார். இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அடுத்துள்ள அஜ்ஜன அள்ளி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி காந்தாமணி (வயது32). இவர்களுக்கு 5 வயது குழந்தை உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டது. இதனால் கோபித்து கொண்டு காந்தாமணி அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த 17-ந் தேதி காந்தாமணி வீட்டில் இருந்து தாயிடம் வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் ஐய்யண்ணன் உறவினர் வீடு உள்பட பல இடங்களில் தேடினார். ஆனால் எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து ஐய்யண்ணன் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் பூவரசன் (வயது20) என்பவர் எனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்று ஏரியூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    3 பெண் குழந்தைகளின் தாய் மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலையைச் சேர்ந்தவர் பாண்டியராஜ். கோவையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது 37). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

    ஆண் வாரிசு இல்லாததால் கணவன்- மனைவி க்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் உமா மகேஸ்வரி வி‌ஷம் குடித்து விட்டதாக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து உமா மகேஸ்வரியின் தந்தை ராஜ வடிவேல் எழுமலை போலீசில் புகார் செய்துள்ளார். அதில், எனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கரிவலம்வந்தநல்லூர் அருகே இளம்பெண் துக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    சங்கரன்கோவில்:

    கரிவலம்வந்தநல்லூரை அடுத்த பாறைப்பட்டியை சேர்ந்தவர் சுந்தரம் (55). இவரது மகள் கற்பகவள்ளி (27). இவருக்கும் காரிசாத்தானை சேர்ந்த வெள்ளத்துரை என்பவருக்கும் இடையே கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 

    இந்நிலையில் வெள்ளத்துரை, கற்பகவள்ளியை அவரது பெற்றோர் வீட்டாருடன் பேசக்கூடாது என சொல்லி தகராறு செய்து வந்துள்ளார். மேலும் அவர் யாருடன் போனில் பேசினாலும் சந்தேகப்பட்டு தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில் சுந்தரத்தின் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு கற்பகவள்ளியை அவர் அழைத்திருந்தாராம். இதற்கு முதலில் செல்ல அனுமதி அளித்த வெள்ளத்துரை நிகழ்ச்சி நடைபெறும் அன்று செல்லக்கூடாது என சொல்லி விட்டாராம். இதில் மனமுடைந்த கற்பகவள்ளி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் முடிந்து 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    2 குழந்தைகளை தவிக்க விட்டு இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் கோட்டார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் குறுந்தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 35). இவரது மனைவி சீதா (28). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    வெங்கடேஷ் திருப்பூரில் தங்கி அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். வெங்கடேசுக்கும், சீதாவுக்கும் குடும்ப தகராறு இருந்து வந்தது. வெங்கடேஷ் தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த போதும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேஷ் திருப்பூருக்கு சென்றார். நேற்று அவர், சீதாவிடம் போனில் பேசினார். அப்போதும் அவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சீதா மனம் உடைந்து காணப்பட்டார். நேற்று இரவு தனது குழந்தைகள் 2 பேரையும் தூங்க வைத்தார். பின்னர் நள்ளிரவு குளியலறைக்கு சென்ற அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலை தாயாரை காணாமல் 2 குழந்தைகள் கண்ணீர் விட்டு கதறி அழுதன. அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு குளியல் அறையில் சீதா பிணமாக தொங்கினார்.

    இதுபற்றி கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, சப்-இன்ஸ் பெக்டர் அருளப்பன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். சீதா தற்கொலை செய்தது தொடர்பாக விசாரிக்க அவரது கணவர் வெங்க டேசை போலீசார் நாகர்கோவிலுக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

    மேலும் சீதாவுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆவதால் அவர் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்தாரா? என்பது பற்றி ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    2 குழந்தைகளை தவிக்க விட்டு சீதா தற்கொலை செய்த சம்பவம் கோட்டார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கணவனுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை பெருமாள் கோவில் தெரு சின்னசந்து பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 29). இவர் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தேவி(23). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக சுரேசுக்கும், அவரது மனைவி தேவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும். அந்த சமயத்தில் கணவனுடன் கோபித்து கொண்டு சின்னசேலத்தில் உள்ள தாய் வீட்டுக்கு தேவி செல்வது வழக்கம். சில நாட்கள் கழித்து சமாதானமாகி தேவி மீண்டும் கணவர் வீட்டுக்கு வருவார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இதுபோல் கணவன்-மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது கணவனுடன் கோபித்துக்கொண்டு தேவி வீட்டை விட்டு வெளியே சென்றார். தாய் வீட்டுக்கு சென்றிருக்கலாம் எனகருதி அவரை சுரேஷ் தேடவில்லை. பின்னர், சிலநாட்கள் கழித்து மாமியார் வீட்டில் சுரேஷ் விசாரித்த போது அங்கு தேவி செல்லவில்லை என்பது தெரியவந்தது.

    இதையடுத்து சுரேஷ் தனது மனைவி மாயமானது குறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குபதிவு செய்து மாயமான தேவியை தேடி வருகிறார்.

    கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    செந்துறை: 

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் இளம்வைதி (வயது 32).இவரது மனைவி கனிமொழி (27) . இவர்கள் காதலித்து  திருமணம் செய்து கொண்டனர். நித்தீஸ் (6) தீபக் (2) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.  இளம்வைதி சென்னை கோயம்பேட்டில் உள்ள மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். மாதத்திற்கு இருமுறை ஊருக்கு வந்து செல்வார். நேற்று வீட்டிற்கு வந்த அவருக்கும், அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கனிமொழி வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். கனிமொழியின் தந்தை கண்ணையன், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக, செந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவே, போலீசார் கனிமொழி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் குடும்ப பிரச்சினை காரணமாக கனிமொழி தற்கொலை செய்தாரா? அல்லது அடித்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என்று போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
    நீடாமங்கலம் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி பகுதி மருத்துவமனை தெரு வை சேர்ந்தவர் சரவணன்(வயது30). டேங்கர் லாரி டிரைவர். இவரது மனைவி புனிதா(25). இருவருக்கும் திருமணமாகி 5 மாதங்கள் ஆகிறது.

    இந்த நிலையில் சரவணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வருவாராம்.

    நேற்று சரவணன் குடித்து விட்டு வருவதை புனிதா கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த புனிதா வீட்டில் இருந்த மண் எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

    இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி புனிதா இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து நீடாமங்கலம் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 5 மாதங்களே ஆவதால் தஞ்சை ஆர்.டி.ஓ., தனி விசாரணை நடத்தி வருகிறார்.

    மற்றொரு சம்பவம் 

    மன்னார்குடி கட்டக்குடி பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் சந்திரபோஸ். கூலி தொழிலாளி. இவரது மனைவி மகாராணி (வயது 21).

    இவர்களுக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது மகாராணி 5 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று ஒரு விருந்து நிகழ்ச்சியில் சந்திரபோஸ் கலந்து கொண்டு மது குடித்ததாக கூறப்படுகிறது. இதை மகாராணி கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி வடுவூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ஈரோட்டில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்த பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் காவேரி ரோடு நேதாஜி நகரைச் சேர்ந்தவர் கவுதமன் (வயது 39). இவரது மனைவி சுமித்ரா (29). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    கவுதமன் தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது இதை சுமித்ரா கண்டித்து வந்ததாக தெரிகிறது.

    கடந்த 18-ந் தேதி கவு தமன் வீட்டிற்கு மது குடித்து விட்டு வந்ததார். அப்போது சுமித்ரா தட்டி கேட்டார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் மனவேதனை அடைந்த சுமித்ரா வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

    அவர்கள் சுமித்ராவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுமித்ரா நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி ராம்ஜிநகர் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருச்சி:

    திருச்சி ராம்ஜிநகர் அருகே பிராட்டியூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 48),  கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மலர்விழி (30). பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஒரு பெண் குழந்தை, 2 ஆண் குழந்தைகள் உள்ளது. 

    இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இன்று காலையும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைத்த மலர்விழி வீட்டிற்குள் விளையாடிக்கொண்டிருந்த தனது மகளை வெளியே அனுப்பி விட்டு தூக்குபோட்டுக் கொண்டார். 

    இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு  சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார்  வழக்குப்பதிவு செய்து மலர்விழியின் கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மலர்விழி திருச்சியில் உள்ள பிரபல கல்லூரி கேண்டீனில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
    கணவருடன் ஏற்பட்ட தகராறில் புதுப்பெண் வி‌ஷம் குடித்தார். அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    செஞ்சி:

    விழுப்புரம் அருகே உள்ள அதனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது30).இவருக்கும் சென்னை கோவினம்பாக்கத்தை சேர்ந்த தண்டபாணி மகள்புஷ்பா (27) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த புஷ்பா வீட்டில் இருந்த வி‌ஷத்தை எடுத்து குடித்தார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆஸ்பத்திரிக்கு கெடார் போலீசார் சென்று சிகிச்சை பெற்று வரும் புஷ்பாவிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது புஷ்பா கூறியதாவது-

    எனது கணவர் என்னை ஆபாசமாக பேசி அடித்து உதைத்து வந்தார். மேலும் மாமியார் பானுமதி பெற்றோர் வீட்டில் இருந்து பணம் வாங்கிவரும்படி சித்ரவதை செய்தார் என கூறியுள்ளார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×